ADDED : அக் 11, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த வடியாங்குப்பம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 22; என்பவரது வீட்டில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
போலீசார் பிரகாஷ்சை கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.