sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா - சீனா கூட்டு முயற்சி 'ஜி - 20'யில் ஜெய்சங்கர் பேச்சு

/

இந்தியா - சீனா கூட்டு முயற்சி 'ஜி - 20'யில் ஜெய்சங்கர் பேச்சு

இந்தியா - சீனா கூட்டு முயற்சி 'ஜி - 20'யில் ஜெய்சங்கர் பேச்சு

இந்தியா - சீனா கூட்டு முயற்சி 'ஜி - 20'யில் ஜெய்சங்கர் பேச்சு


ADDED : பிப் 22, 2025 03:31 AM

Google News

ADDED : பிப் 22, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோஹன்னஸ்பர்க் : பிரிந்து கிடக்கும் இன்றைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், 'ஜி - 20' அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் இந்தியாவும், சீனாவும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட, 20 நாடுகள் அங்கம் வகிக்கும், 'ஜி - 20' அமைப்பின், 2025ம் ஆண்டுக்கான உச்சி மாநாட்டை, தென் ஆப்ரிக்கா தலைமை ஏற்று நடத்துகிறது.

அந்த வகையில், ஜி - 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர்

ஜெய்சங்கர் பேசியதாவது:


இந்தியா - சீனா உறவில் பல்வேறு சவால்கள் இருந்த கால கட்டத்தில் கூட இரு நாடுகளும் பேச்சு நடத்த ஜி - 20 போன்ற அமைப்புகள் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தன.

எங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வெளியுறவு செயலரும் சீனா சென்று எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது குறித்து விவாதித்தனர்.

தற்போது மேலும் பல கருத்துப் பரிமாற்றம் நடந்ததில் மகிழ்ச்சி. பிரிவினைப்பட்டு கிடக்கும் இன்றைய உலகளாவிய சூழலில், ஜி - 20 அமைப்பை பாதுகாக்க இந்தியாவும், சீனாவும் கடுமையாக உழைத்துள்ளன என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

இதுவே சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்திற்கு சான்றாகும்.

இவ்வாறு அவர் பேசினர்.






      Dinamalar
      Follow us