ADDED : மே 01, 2024 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன், லண்டன் சாலையில் சென்றவர்களை, வாளால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஹைனால்ட் என்ற இடத்தில், அடையாளம் தெரியாத நபர் சாலையில் செல்வோரை தாக்குவதாக நேற்று தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தபோது, படை வீரர்கள் பயன்படுத்தும் மிகப் பெரிய வாளால் சாலையில் செல்வோரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கினார்.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். இரண்டு போலீசார் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே தாக்குதல் நடத்தியவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். காயம் அடைந்தவர்களின் நிலை குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
இருப்பினும், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.