sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பாட்னாவிலும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

/

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பாட்னாவிலும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பாட்னாவிலும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பாட்னாவிலும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி


UPDATED : பிப் 28, 2025 02:27 PM

ADDED : பிப் 28, 2025 07:22 AM

Google News

UPDATED : பிப் 28, 2025 02:27 PM ADDED : பிப் 28, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மண்டு: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஹாரின் பாட்னா உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

சிந்துபல்சோக் மாவட்டத்தின் பைரப் குந்தா பகுதியில் இன்று அதிகாலை 2.35 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேபாளம் மட்டுமின்றி, பீஹாரின் பாட்னா, மேற்கு வங்கத்தின் சிலிகுரி உள்ளிட்ட பல்வேறு இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால், கட்டடங்கள் குலுங்கியுள்ளன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதுவரையில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை.

ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கணிப்பின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. அதேபோல, இந்தியாவின் தேசிய நிலநடுக்கம் ஆய்வு மையத்தின் கணிப்பின் படி, 5.5ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஹிமாலய பகுதியான திபெத்தில் 6 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 125 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us