அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
UPDATED : செப் 04, 2024 11:43 PM
ADDED : செப் 04, 2024 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாயினர். பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜியார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் , அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாயினர். பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்ததாகவும் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.