sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியருக்கு 25 ஆண்டு சிறை கனடா நீதிமன்றம் தீர்ப்பு

/

இந்தியருக்கு 25 ஆண்டு சிறை கனடா நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியருக்கு 25 ஆண்டு சிறை கனடா நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியருக்கு 25 ஆண்டு சிறை கனடா நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : நவ 01, 2025 04:44 AM

Google News

ADDED : நவ 01, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடாவில், 2022ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை வளாகத்தில், விஷால் வாலியா என்பவர் 2022ல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற நபர்கள், அவருடைய வாகனத்தையும் தீவைத்து எரித்தனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், வான்கூவர் போலீசாரும் இணைந்து சில நிமிடங்களிலேயே குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

மற்றொரு வாகனத்தில் தப்பியோடிய பல்ராஜ் பஸ்ரா, இக்பால் காங், டியான்ட்ரே பாப்டிஸ்ட் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில், பல்ராஜ் பஸ்ரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தின் நடுவர் மன்றம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்ராஜ் பஸ்ராவை முதல் குற்றவாளியாக அறிவித்து, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தீவைப்பு வழக்கில் இக்பால் காங்கிற்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாப்டிஸ்டுக்கு, 17 ஆண்டுகள் பரோல் இல்லாத ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us