sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து

/

இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து

இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து

இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து

5


ADDED : ஜூலை 08, 2025 08:47 PM

Google News

5

ADDED : ஜூலை 08, 2025 08:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோம்: இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி, 35 வயதுடைய நபர் உயிரிழந்தார். இதன் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று வோலோடியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது, விமானம் அருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் இன்ஜினுக்குள் உள்ளிழுக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் 35 வயது உடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்துக்குப் பின்னர், உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என வோலோடியா விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பு

இந்த விபத்து காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

விசாரணை

காலை 10:20 முதல் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, மதியத்துக்கு மேல் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.








      Dinamalar
      Follow us