sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் நிதி பற்றாக்குறை: ஒபாமா அலறல்

/

அமெரிக்காவில் நிதி பற்றாக்குறை: ஒபாமா அலறல்

அமெரிக்காவில் நிதி பற்றாக்குறை: ஒபாமா அலறல்

அமெரிக்காவில் நிதி பற்றாக்குறை: ஒபாமா அலறல்


ADDED : ஜூலை 17, 2011 01:24 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : 'நாட்டின் நிதிப் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் கூறியதாவது: கடந்த பத்தாண்டுகளாக, அமெரிக்காவின் செலவினங்கள், வருவாயை விட, அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக, கடனும் அதிகரித்து விட்டது.

இந்த சிக்கலான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும், இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான், நல்ல முடிவு கிடைக்கும். ஒருங்கிணைந்த செயல்பாடு, விட்டுக் கொடுத்தல், சமாதானப்போக்கு போன்ற நடவடிக்கைளால் மட்டுமே, நமக்கு உள்ள நிதிப் பிரச்னையில் இருந்து வெளிவர முடியும். செலவினங்களை குறைப்பது, வரி விதிப்பு முறைகளில் உள்ள ஓட்டைகளை அடைப்பது ஆகியவற்றின் மூலம், பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.அரசியல் விவகாரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, நாட்டு நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும்.



நிதி பற்றாக்குறையை போக்க வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது. பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கான செலவுகளை குறைப்பது, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சீர்திருத்த திட்டங்களுக்கான செலவை குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கான திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். வரி விதிப்பு முறையில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, எந்த ஒரு சமாதானப்போக்கிற்கும் தயாராக உள்ளேன். இதே அளவுக்கு சமாதானப்போக்கை, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே, என் வேண்டுகோள். செலவுகளை குறைக்காமல், பற்றாக்குறையை போக்க முடியாது.



இந்த பிரச்னைக்கு, அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர்களும், தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளதால், பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த சுமையை தாங்க முடியாது. எண்ணெய் நிறுவனங்கள், பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்துள்ளன. எனவே, வரிச் சலுகை காட்டப்பட வேண்டும் என, அந்த நிறுவனங்கள் கேட்கும் என, நான் நினைக்கவில்லை. 'ஹெட்ஜ்பண்ட் மேனேஜர்கள்' தங்களின் செயலர்களை விட, குறைவாக வரி செலுத்துவார்கள் என்றும், நான் நினைக்கவில்லை. இவ்வாறு ஒபாமா பேசினார்.








      Dinamalar
      Follow us