ADDED : செப் 01, 2011 01:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர் : இந்தியாவின் மிகப் பெரிய தனியார்த்துறை வங்கியான ஐசிஐசிஐ, சிங்கப்பூரில் தனது 2வது கிளையை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பெருமளவில் பண பரிமாற்றம் நடத்தப்படுவதால் வாடிக்கையாளர்களின் தேவைக்காக இந்த புதிய கிளையை திறக்க உள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரின் சில்லறை கிளை துறையில் தடம் பதிக்கவும், சர்வதேச அளவில் தடம் பதிக்கவும் திட்டமிட்டிருப்பதாக ஐசிஐசிஐ வங்கியின் சிங்கப்பூர் கிளைகளுக்கான தலைமை நிர்வாகி பி.கே.ஐயர் தெரிவித்துள்ளார்.