sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!

/

காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!

காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!

காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!


ADDED : ஏப் 07, 2025 10:24 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ஓமனுக்கு அருகே காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படையினர் அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஈரானிய படகு ஒன்று பாதிப்பில் உள்ளதாக தகவல் கிடைத்தது. படகின் குழுவினர் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஒருவருக்கு விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஈரானுக்கு செல்லும் வழியில் அவர் மற்றொரு படகுக்கு மாற்றப்பட்டார்.

இந்த தகவல் இந்திய கடற்படையினருக்கு கிடைத்தது. இதையடுத்து, ஐ.என்.எஸ்., திரிகண்ட் போர்க் கப்பலில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஈரான் மீன்பிடி படகில் 11 பாகிஸ்தானியர்கள், 5 ஈரானியர்கள் இருந்தனர். காயமடைந்த நபர் பாகிஸ்தானை (பலூச்) சேர்ந்தவர். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.

திரிகண்ட் கப்பலில் இருந்த மருத்துவ அதிகாரி மார்கோஸ், காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு சிகிச்சை அளித்தார். மயக்க ஊசி செலுத்தி தையல் போட்டார். இந்த சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

ஈரானை அடையும் வரை அவருக்கு தேவையான மருத்துவ பொருட்களும் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்கியதற்காக படகில் இருந்த குழுவினர் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us