sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 ஆஸ்திரேலியா இளம்பெண் கொலை வழக்கில் இந்திய வம்சாவளிக்கு '25 ஆண்டு'

/

 ஆஸ்திரேலியா இளம்பெண் கொலை வழக்கில் இந்திய வம்சாவளிக்கு '25 ஆண்டு'

 ஆஸ்திரேலியா இளம்பெண் கொலை வழக்கில் இந்திய வம்சாவளிக்கு '25 ஆண்டு'

 ஆஸ்திரேலியா இளம்பெண் கொலை வழக்கில் இந்திய வம்சாவளிக்கு '25 ஆண்டு'


ADDED : டிச 11, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: ஆஸ்திரேலியாவில், 2018-ம் ஆண்டு இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள வான்கெட்டி கடற்கரையில் டோயா கார்டிங்லி, 24, என்ற இளம்பெண், 2018ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்த ராஜ்வீந்தர் சிங் என்ற இந்திய வம்சாவளிக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஆஸ்திரேலியாவில் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்த ராஜ்வீந்தர் சிங், இந்த சம்பவத்திற்கு பின், இந்தியா தப்பியோடினார். ஆஸ்திரேலிய போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் நாடு கடத்தப்பட்டார்.

அந்நாட்டின் கெய்ர்ன்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ராஜ்வீந்தர் சிங் மீதான கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.






      Dinamalar
      Follow us