sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்

/

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்

15


ADDED : ஜூன் 22, 2025 08:37 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 08:37 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ''ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி அடைந்துள்ளோம். ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்'' என நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் வெற்றிகரமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாட்டு மக்களுக்கு, அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அமைதி, அல்லது பெருந்துயரம்.

ராணுவ வெற்றி

ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி அடைந்துள்ளோம். ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும். போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சம்மதிக்க வேண்டும். இந்த நிலை தொடரக்கூடாது. அமைதி நிலவ வேண்டும். ஈரான் மீதான இந்த தாக்குதல் ஒரு அற்புதமான ராணுவ வெற்றி. ஈரான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முன்னணி நாடு. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தியுள்ளோம்.

துல்லியமான தாக்குதல்

ஈரானின் முக்கிய அணு ஆயுத நிலையங்களை தாக்கி உள்ளோம். ஈரானில் இன்னும் பல இடங்களை குறி வைத்துள்ளோம். இன்று நாங்கள் செய்ததை உலகின் எந்த ராணுவத்தினாலும் செய்ய முடியாது. ராணுவத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

அமெரிக்க ராணுவத்தினர் துல்லியமான தாக்குதலை ஈரானின் அணு ஆயுத மையங்கள் மீது நிகழ்த்தியுள்ளனர்.
ஈரான் நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்க வான்வெளிப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 40 ஆண்டுகளாக அமெரிக்கா, இஸ்ரேலை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அச்சுறுத்தல்கள்

இஸ்ரேல் மீதான போரை ஈரான் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அமெரிக்காவின் தாக்குதல் தொடரும். ஈரானில் அணு ஆயுத அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவது எங்கள் இலக்கு. ஈரான் அமைதியான நிலைக்கு திரும்பாவிட்டால் அடுத்தடுத்த தாக்குதல்கள் மோசமாக இருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

இஸ்ரேல் வரவேற்பு!

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி. யாரும் செய்யத் துணியாத நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த டிரம்பின் தலைமை உதவி உள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகின் அபாயகரமான ஆயுதத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us