sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மியான்மர் உள்நாட்டு போர் 3 கோடி மக்கள் வெளியேற்றம்

/

மியான்மர் உள்நாட்டு போர் 3 கோடி மக்கள் வெளியேற்றம்

மியான்மர் உள்நாட்டு போர் 3 கோடி மக்கள் வெளியேற்றம்

மியான்மர் உள்நாட்டு போர் 3 கோடி மக்கள் வெளியேற்றம்

2


ADDED : செப் 19, 2024 01:26 AM

Google News

ADDED : செப் 19, 2024 01:26 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நைப்பியதோ: மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு போரால், மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து உள்ளதாக ஐ.நா., சபைதெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ராணுவத்திற்கும், பூர்வகுடிகளான காரேன் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

ஐ.நா., சபையின் மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:

மியான்மரின் ராஹின் மாகாணம் உட்பட பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் மக்கள், பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர்.

அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட மக்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 5,350 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

அவ்வாறு, அகதிகளாக சென்ற மக்களின் நிலை பற்றி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us