நோபல் பரிசு பெற்றவருக்கு மோசடி வழக்கில் 6 மாதம் சிறை
நோபல் பரிசு பெற்றவருக்கு மோசடி வழக்கில் 6 மாதம் சிறை
ADDED : ஜன 01, 2024 07:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்கா: பங்களாதேஷில், வங்கி மோசடி வழக்கில் நோபல் பரிசு பெற்றவருக்கு அந்நாட்டு கோர்ட் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
வங்க தேசத்தைச் சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் முகமது யூனிஸ்,83 இவர் வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டமைக்காக 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
கடந்த 1983-ம் ஆண்டு நிறுவிய மைக்ரோ கிரிடிட் கிராமிய வங்கியில். தொழிலாளர் சட்டத்தினை மீறியதாகவும், தொழிலாளர் நல நிதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக தொழிலாளர் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் முகமது யூனிஸ் உள்ளிட்ட மூவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 6 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி ஷேக் மெரினா சுல்தானா தீர்ப்பளித்தார்.