sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!

/

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!

1


ADDED : ஏப் 19, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 07:15 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் முற்றியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.

இந்த சூழலில், கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக அமெரிக்க கப்பல் கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனை மாற்றி அமைக்க, சீன கப்பல்களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு துறைமுக கட்டணம் விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு டன் சரக்குக்கு 50 டாலர் (ரூ.4,270) என்ற விகிதத்தில் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: இது தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை.

இது உலகளாவிய கப்பல் செலவுகளை உயர்த்துவதோடு, உலகளாவிய தொழில்துறையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் பணவீக்க அழுத்தங்களை அதிகரிக்கிறது. அமெரிக்க கப்பல் கட்டும் தொழிலை புத்துயிர் பெறச் செய்வதில் தோல்வி அடையும். பொருட்களின் விலை அதிகரித்து அமெரிக்க நுகர்வோர்தான் பாதிக்கப்படுவார்கள். அந்த நாட்டு கப்பல் கட்டும் தொழிலை மேம்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us