sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 இலங்கை தொடர் கனமழையால் வெள்ளம்; 33 பேர் உயிரிழப்பு, 14 பேர் மாயம்

/

 இலங்கை தொடர் கனமழையால் வெள்ளம்; 33 பேர் உயிரிழப்பு, 14 பேர் மாயம்

 இலங்கை தொடர் கனமழையால் வெள்ளம்; 33 பேர் உயிரிழப்பு, 14 பேர் மாயம்

 இலங்கை தொடர் கனமழையால் வெள்ளம்; 33 பேர் உயிரிழப்பு, 14 பேர் மாயம்


ADDED : நவ 28, 2025 06:40 AM

Google News

ADDED : நவ 28, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு:: இலங்கையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் மாயமாகி உள்ளனர்.

நம் அண்டை நாடான இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இலங்கை முழுதும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக, தேயிலை தோட்ட பகுதிகளான நுவரெலியா, பதுல்லா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பதுல்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டு, 16 பேர் உயிருடன் புதைந்தனர். நுவரெலியாவில் நான்கு பேர் இறந்தனர். நாடு முழுதும் 33 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.

நிலச்சரிவில், 400 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், 1,100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. பாறைகள், மரங்கள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்து, சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us