எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே அக்கறை; ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோபம்
எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே அக்கறை; ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோபம்
ADDED : ஜன 02, 2025 07:12 AM

கீவ்: எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இது குறித்து புத்தாண்டு உரையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், 'இந்த ஆண்டிற்குள் போரை முடிவுக்கு கொண்டு வர தன்னால் முடிந்த வரை அனைத்து வேலைகளை செய்வேன். இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும், போதுமான வலிமையுடன் போராட வேண்டும். இந்த ஆண்டு எங்கள் ஆண்டாக இருக்கும்' என தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் கூறிய சில மணி நேரங்களில், உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 6 பேர் பலத்த காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'புத்தாண்டு இரவில் கூட ரஷ்யா உக்ரைனை காயப்படுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.