/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ரமண மகரிஷியின் நட்சத்திரமான புனர்வசு தின பூஜை
/
ரமண மகரிஷியின் நட்சத்திரமான புனர்வசு தின பூஜை
மே 31, 2025

பகவான் ரமண மகரிஷி அவதரித்த புனர்வசு (புனர் பூசம்) நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் உலகெங்கிலும் உள்ள ரமண அன்பர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும் புனர்வசு கொண்டாடும் பாரம்பரியம் பகவானின் காலத்திலிருந்தே தொடர்கிறது, இது அனுதினமும் ஸ்ரீ பகவானுடன் என்ற நூலில் (19-/4/-46 காலை) சம்பவத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த மாத புனர் வசு நாளான சனிக்கிழமை காலை லோதி சாலையில் அமைந்துள்ள ரமண கேந்திராவில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. குரு வந்தனம், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனத்துடன் பூஜை தொடங்கியது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ரமண அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேச சாரம் ஆகியவற்றை பாராயணம் செய்தனர். ரமண பக்தர் தீபா மகேஷ், பகவான் ரமண மகரிஷியைப் போற்றி, முனிவர் முருகனார் இயற்றிய புனர்வசு வண்ணம் ( ரமண சந்நிதி முறையில் இடம் பெற்றுள்ளது) பாடலை பக்திப் பெருக்குடன் பாடினர். அக்ஷரமணமாலையை தொடர்ந்து, பிரபத்ய அஷ்டகம் ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து மந்திரபுஷ்பம், ஆரத்தியுடன் நிறைவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்