/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சாலிமார் பாக்கில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
/
சாலிமார் பாக்கில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
சாலிமார் பாக்கில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
சாலிமார் பாக்கில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
மே 09, 2025

புது தில்லி: சாலிமார் பாக்கில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி திருக்கோயிலில் மே 8ம் தேதி மாலை ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வேத மந்திரங்கள் முழங்க மிக கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் இதில் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் மண்டபத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்யாண விருந்து நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!
ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு ஆலயங்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமாகும். ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.
மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் அதே சமயத்தில் திருமணமான பெண்கள் பலரும் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். இப்படி மாற்றுவதால் அன்னை மீனாட்சியே போலவே தங்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்