/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஆக., 24 முதல் நொய்டாவின் பழமையான விநாயகர் கோவில் பிரதிஷ்டா தினம்
/
ஆக., 24 முதல் நொய்டாவின் பழமையான விநாயகர் கோவில் பிரதிஷ்டா தினம்
ஆக., 24 முதல் நொய்டாவின் பழமையான விநாயகர் கோவில் பிரதிஷ்டா தினம்
ஆக., 24 முதல் நொய்டாவின் பழமையான விநாயகர் கோவில் பிரதிஷ்டா தினம்
ஆக 23, 2025

நொய்டா செக்டர் 22 ல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் ஐந்து நாள் விழாவாக, ஸ்ரீ விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும். நொய்டாவின் பழமையான இக்கோவிலின் பிரதிஷ்டா தினம் இணைந்து வருவதால், அனைத்து நிகழ்ச்சிகளும், கோவில் வளாகத்தில் ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடக்க உள்ளன.
முதல் நாளில் விழா வேத மந்திர கோஷங்களுக்கு மத்தியில் கணபதி ஹோமத்துடன் தொடங்கும், தவிர ஏகாதச ருத்ராபிஷேகம், மகா கணபதி மூல ஜப நடக்க உள்ளன. மாலையில், விநாயகர் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்படுவார். மேலும், விஎஸ்எஸ், நொய்டா குழுவினரின் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், தொடர்ந்து, சாய்கிருபா ராஜு, கர்நாடக இசை வழங்குவார். இதில் உமா அருண் வயலின் மற்றும் ஜி சுவாமிநாதன் மிருதங்கம், வாசிக்க உள்ளனர்.
இரண்டாவது நாளில், காலையில் கலச ஸ்தாபனம் , துர்கா ஹோமம், நவகிருஹ மற்றும் நக்ஷத்ர ஹோமம், மகா கணபதி மூல ஜப ஆகியவை நடக்க உள்ளன. மாலையில், விஎஸ்எஸ் பஜன் மண்டலி நொய்டாவின் நாம சங்கீர்த்தனம் நடை பெற உள்ளது.
மூன்றாவது நாளில், அபிஷேகம் அனைத்து தெய்வங்களுக்கும், மகா கணபதி மூல மந்திரம் நடக்க உள்ளன. மாலையில், மாஸ்டர் ஸ்கந்தன் புல்லாங்குழல் வாசிப்பார், மேலும், பக்தி பாடல்களும் இருக்கும்.
நான்காவது நாளில், மஹா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா கணபதி மூல மந்திர ஜப ஆகியவையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். மாலையில், ஸ்ரீ வரசித்தி விநாயகர் சந்தன அலங்காரத்தில் அலங்கரிக்கப்படுவார். மேலும் இளம் குழந்தைகள் ஜே கிரித்திக், ஆர் ஹிரிதிக் 'வேடிக்கை காவிய நகைச்சுவை' வழங்குவார்கள்.
இறுதி நாளில், ஸ்ரீ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, காலை நிகழ்ச்சி கணபதி ஹோமம், அபிஷேகம், கணபதி மூல மந்திரத்துடன் தொடங்கும். மாலையில் ஸ்ரீ விநாயகரின் ஊர்வலம், அதைத் தொடர்ந்து வித்யாதி உற்சவம் நடக்க உள்ளன. அனைத்து நாட்களிலும் மகா தீபாராதனை முடிந்தவுடன், மகா பிரசாதம் வழங்கப்படும்.
'மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது' ! தெய்வீக சக்தி உள்ள இந்த பிள்ளையாரை காண, நொய்டா மட்டுமின்றி, சுற்றுப்புறத்தில் இருக்கும் பக்தர்கள் தரிசனத்திற்கு, அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு இடங்களிலிருந்து, நாற்பது வருடங்களுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறார்கள், என்பது குறிப்பிடத்தக்கது.
செக்டார் 22 உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், திங்கட்கிழமை 29 ஆகஸ்ட் 2022 அன்று, பிரம்ம ஸ்ரீ வருண் ஷர்மா அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கோவிலில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் (மூலவர்), தவிர, நவகிரகங்கள் மற்றும் ஸ்ரீ துர்க்கை ஆகிய விக்கிரஹங்கள் உள்ளன. விபிஎஸ் ஆஸ்தான வாத்தியார்கள் சங்கர், ஸ்ரீராம் ஆகியோர் தலைமையில், தினசரி பூஜைகள் மற்றும் ஹோமங்கள், கோவில் வாத்தியார் ஜெகதீசன் சிவாச்சாரியார் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
வி பி எஸ் நிர்வாகம், பல்வேறு சமய, ஆன்மீக, கலாச்சார நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி வருகிறது. 'தியாகராஜ ஆராதனை', வாராந்திர பாராயணம், மகா சிவராத்திரி, ஸ்ரீ ராம நவமி, ஆவணி அவிட்டம், 'தை வெள்ளி', ஆடி வெள்ளி, ஆடி பூரம், புரட்டாசி மாத பஜனைகள், நவராத்திரி பண்டிகை, ஸ்ரீ அய்யப்ப பஜனை, தனுர் மாத பூஜை, ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேகங்கள், பிரதோஷம், மனிதகுலத்தின் நலனுக்காக கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
ஒத்த எண்ணம் கொண்டவர்களால் தொடங்கப்பட்டு, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், இக்கோவிலை நிர்வகித்து வருகிறது. இந்த கோவில் கோபுரம், பிள்ளையாரை தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியம்
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
