வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தவித்து வந்த மக்கள், ஹெலிகாப்டர் வாயிலாக ராணுவத்தினரால் மீட்கப்பட்டு வருகின்றனர். பத்திரமான இடத்திற்கு வந்த பின்பும் அதிர்ச்சியில் இருந்து மீளாத தாயும், மகனும். இடம்: நுவாகோட், நேபாளம்.
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் வண்டல் படிவுகளால் நுவாகோட் மாவட்டம் திரிசூலி அணைக்கு அருகில் உள்ள நகர பகுதி புதைந்தும், சிதைந்தும் காணப்படுகிறது.