தமிழ்நாடு ராஜஸ்தானி அசோசியேஷன் சார்பில் ராஜஸ்தானி-தமிழ் சேவை விருதுகள் 2026 வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் விருதுகளை வழங்கினார். உடன் இடமிருந்து சங்கத்தின் செயலர் தினேஷ் கோத்தாரி, சுகல்சந்த் ஜெயின் ஜூரி, விருத்தாளர்கள் ஓதுவார் சத்குருநாதன், பயிர் அறக்கட்டளையின் தலைவர் ஆராயி, வழக்கறிஞர் ராஜா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன், பொது சுகாதார மையம் தலைவர் சுவாமிநாதன், தமிழ்நாடு ராஜஸ்தான் அசோசியேஷன் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமால், தி இந்து பத்திரிக்கை முன்னாள் தலைமை ஆசிரியர் ரவி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருவாமி, சங்கத்தில் கன்வீனர் அணில் கிச்சா, சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அஜித் சோர்டியா.இடம்: தாஜ் கன்னிமாரா
ஸ்ருதி ஸ்மிருதி நாட்டியரங்கம் சார்பில் நாட்டிய கலைஞர் வீணா ராமகிருஷ்ணனின் மாணி சாய்பிரியாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி தி.நகர் கர்நாடக சங்க மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ஓணம் பண்டிகை வரும் 26ல் கொண்டாடப்படவுள்ள நிலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவனின் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கேரள பாரம்பரிய நடனமான ஒட்டன் துள்ளலில் அசத்திய பெண்.
நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலக மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில்,1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தின் போது விழுந்த ரோபோ மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறது.
ஊட்டியில் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் கர்நாடக தோட்டக்கலை பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணியரை பரவசப்படுத்துகிறது.