பனியால் உறைந்திருந்த ஜம்மு- காஷ்மீர் தால் ஏரி, தற்போது வெயில் எட்டிப் பார்த்ததால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலா பயணியரை ஏற்றிச் செல்லும் பாரம்பரிய படகு இல்லங்கள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்து ஆணையரகம் நுழைவு வாயிலில் கருப்பு ரிப்பன் கட்ட முயன்றவர்களை கைது செய்த போலீசார்.இடம் : கிண்டி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே கானார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மழை இன்றி நெற்பயிர் காய்ந்து பாதிப்படைந்ததால் அரசு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.