சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு மிழ்நாடு தற்காலிக அரசு பணி யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நூதன முறையில் யோகா செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி அருகே முத்தோரை பகுதியில் உள்ள ரேடியோ வானிலை மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் 58 வது உதய தினத்தை முன்னிட்டு மாத்திர் மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் பல்வேறு நாட்டினர் ஒன்று கூடி தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
திருத்தேரோட்டம்!சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி-வடிவுடையம்மன் கோவிலில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 46அடி உயர திருத்தேரில் சந்திரசேகரர் -திரிபுர சுந்தரி தாயார் எழுந்தருளி மாட வீதி உலா வந்தனர்.
தேர்தலில் விவசாயி சின்னம் கேட்கறாங்க; விவசாயி மாதிரி போஸ் கொடுக்கறாங்க. ஒரு நாள் விவசாயா வாழ்ந்து பார்த்தால் தான் அவங்களோட கஷ்டம் புரியும். இடம்: பொள்ளாச்சி.