அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 292 செவிலியர்களை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் ஜே.ஆர்., காய்ன்ஸ் அண்ட் ஜென்ஸ் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்தோனேசியா நாட்டு கரன்சி நோட்டில் உள்ள விநாயகர்.
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் தொல்லியல் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பழங்கால பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.