நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.