பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்து மலைச் சரிவில் விழித்தெழுந்து பூத்த நீலக்குறிஞ்சி பச்சைப் புல்வெளியை போர்வையாக்கி கண்கள் குளிரும் இந்த அற்புத காட்சியை காண காத்திருக்கும் காலம் ஒரு தவம். இடம்: கூடலூர் ஜீன்பூல் தாவர மையம்.
நம் அண்டை நாடான சீனாவில் நவுல் புயல் கரையை கடந்தது. இப்புயல் மிக வலுவானதாக இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து குவாங்டாங் மாகாணத்தில் உள்ள துறைமுகம் ஒன்றில் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான மேம்பாலப்பணி நடந்து வருகிறது. அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு தண்ணீர் தொட்டி அமைக்க 10 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
நீட் எனப்படும் இளநிலை மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்தது. பிறகு தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடி மகிழ்ந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஆரூர் அகரம் பகுதியில் தயாரித்து செய்யப்பட்ட விநாயகர் முதற்கட்டமாக வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ளது.
கோவில் தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில், சென்னை சிவானந்த சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில், தென் பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.