வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி அருகே வெல்லம் பட்டியில், அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து அவ்வழியே வந்த மற்றொரு அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடை மேம்பாலம் இருந்தும் மக்கள் ஆபத்தான நிலையில் சாலையை கடந்து செல்வதால். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.