மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தென்காசி மாவட்டம் மேக்கரை அச்சன்கோவில் சாலையில் ஏற்பட்டுள்ள காற்றாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் வாகனங்கள்.
வட மாநிலங்களில் கங்கை நதிக்கு நடைபயணமாக சென்று அங்கிருந்து புனித நீரை காவடியில் சுமந்து வந்து தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வது கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது; அவ்வாறு நடைபயணம் மேற்கொண்ட பக்தர் ஒருவர் காவடியின் ஒருபுறத்தில் தன் மகளை சுமந்து சென்றார். இடம்; மீரட், உத்தரபிரதேசம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 30 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.