வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்து பழைய தொழிலாளர்களை நீக்குவதாக கூறி மதுக்கரை ஏ.சி.சி., அதானி சிமெண்ட் தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் .
பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சிட்கோ பகுதியில் போக்குவரத்து போலீசார் மற்றும் ரத்தினம் கல்லூரி மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
ஊட்டி கூடலூர் சாலை ஊசிமலை அருகே அவ்வப்போது வரும் மேகமூட்டம் அப்பகுதியை சுற்றியுள்ள உயர்ந்த கற்பூர மரங்கள், மலைக்கு வரும் பயணிகளின் மனங்களை இதமாக்குகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக குவஹாத்தியின் அனில் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கித் தவித்தோரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
கபினியில் இருந்து கர்நாடக அரசு காவிரியில் திறந்த நீர் இரு தினங்களுக்கு பின் மேட்டூர் அணை நோக்கி சீறிப்பாய்ந்தது. முன்னதாக தமிழக- கர்நாடகா எல்லையிலுள்ள பாலாறு வனப்பகுதி வழியாக பெருக்கெடுத்து வந்த காவிரி நீர்.