கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீரால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள பெரியபாணி பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.
உத்தர பிரதேசத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக வாரணாசியில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து நகரின் ஒரு பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது கடந்த 1945, ஆகஸ்ட் 6ல் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. ஹிரோஷிமா தினத்தையொட்டி மஹாராஷ்டிராவின் மும்பையில் அணு ஆயுத எதிர்ப்பு வாசகங்களை முகம் மற்றும் கைகளில் வரைந்து அமைதி பேரணி சென்ற மாணவ - மாணவியர்.
விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் மற்றும் நகராட்சி கமிஷனர் நாகராஜ் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் சிறுபான்மையிருக்கான புதிய 15 அம்சத் திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடந்தது.