திருநெல்வேலி கால்வாயில் தாமிரபரணி தண்ணீர் திறக்கப்படாததால் நடவுக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இடம்: டவுன் ரயில் நிலையம் அருகே.
விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையின் (சென்டர் மீடியன்) செடிகள் அதிகளவில் நடப்பட்டு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இடம். கடலூர்
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீரால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள பெரியபாணி பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.
உத்தர பிரதேசத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக வாரணாசியில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து நகரின் ஒரு பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.