திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில், சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பந்தலூர் அருகே போத்து கொல்லி பழங்குடியினர் மறுவாழ்வு மையத்தில் நாவா சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் பூக்கோலமிட்டு மகிழ்ந்தனர்.
சட்டசபை நிகழ்வை காண சென்னை தலைமை செயலகத்திற்கு வந்திருந்த சேலம் ஸ்ரீ சுவாமி இன்டர்நேஷனல் பள்ளி மாணவியர், அந்த வளாகத்தில் நீண்ட நேரமாக வெயிலில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 1008 சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்...