ஸ்ருதி ஸ்மிருதி நாட்டியரங்கம் சார்பில் நாட்டிய கலைஞர் வீணா ராமகிருஷ்ணனின் மாணி சாய்பிரியாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி தி.நகர் கர்நாடக சங்க மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ஓணம் பண்டிகை வரும் 26ல் கொண்டாடப்படவுள்ள நிலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவனின் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கேரள பாரம்பரிய நடனமான ஒட்டன் துள்ளலில் அசத்திய பெண்.
நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலக மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில்,1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தின் போது விழுந்த ரோபோ மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறது.
ஊட்டியில் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் கர்நாடக தோட்டக்கலை பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணியரை பரவசப்படுத்துகிறது.