உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் 1923ல் கட்டப்பட்ட லக்ஷ்மன் ஜூலா பாலம் மிகவும் பழமையானதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது. அதன் அருகிலேயே புதிதாக பஜ்ரங் சேது பாலம் தற்போது கட்டப்பட்டுள்ளது. கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் இந்த நேரத்தில் இந்த பாலத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் நெல்லையப்பரிடம் கோபித்துக் கொண்டு மானூர் அம்பலவான சுவாமி கோவிலுக்கு வந்த கருவூர் சித்தரை தேடி வந்து நெல்லையப்பர் காட்சி தரும் ஆவணி மூலத் திருவிழா நடந்தது.
ஆழ் கடலில் பிடித்து வரப்பட்ட 800 கிலோ எடை கொண்ட ராட்சத ஏமன்கோலா மீனை விசைப்படகில் இருந்து கிரேன் உதவியுடன் இறக்கும் மீனவர்கள். இடம்: காசிமேடு மீன் பிடி துறைமுகம், சென்னை.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கனமழை காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள மிகப்பழமையான சுஜாவன் தேவ் சிவன் கோவில் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது.