உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கனமழை காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள மிகப்பழமையான சுஜாவன் தேவ் சிவன் கோவில் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது.
திருநெல்வேலியில் நெல்லையப்பரிடம் கோபித்துக் கொண்டு மானூர் அம்பலவான சுவாமி கோவிலுக்கு வந்த கருவூர் சித்தரை தேடி வந்து நெல்லையப்பர் காட்சி தரும் ஆவணி மூலத் திருவிழா நடந்தது.
ஆழ் கடலில் பிடித்து வரப்பட்ட 800 கிலோ எடை கொண்ட ராட்சத ஏமன்கோலா மீனை விசைப்படகில் இருந்து கிரேன் உதவியுடன் இறக்கும் மீனவர்கள். இடம்: காசிமேடு மீன் பிடி துறைமுகம், சென்னை.
நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மனித உருவ ரோபோக்களுக்கான உலக விளையாட்டு போட்டியின் துவக்க விழா நடந்தது. அப்போது போட்டிக்கு தயார் நிலையில் இருந்த ரோபோக்கள்.