ஊட்டியில் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் கர்நாடக தோட்டக்கலை பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணியரை பரவசப்படுத்துகிறது.
நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலக மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில்,1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தின் போது விழுந்த ரோபோ மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த மந்தன் 4 யுவா -நாக்பூர் 2026 என்ற இளைஞர் மாநாட்டு நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி, இந்தியா மற்றும் ஆசியா சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தது.
நாட்டின் விண்வெளி துறையை சேர்ந்த ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது உலக திறமையாளர்களை ஈர்க்கும் வகையில் வலுவான விண்வெளித்துறை சூழலை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இடம்: புதுடில்லி.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்.,14ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மயில் வாகனத்தில் கையில் வேலுடன் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை விழா பந்தலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.