தமிழக அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலையை உயர்வு போதாது என்றும், கூடுதல் விலை உயர்வை அறிவிக்கக் கோரியும், கால்நடை விவசாயிகள், ஆவினுக்கு பால் வழங்க மறுத்து, தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில், சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், செல்லியம்பாளையத்தில், சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கால்நடை விவசாயிகள்.
வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சுற்றுலா பயணியர் இதை கண்டுகொள்வதில்லை. அவர்கள் விட்டுச்சென்ற குளிர்பான பாட்டிலை எடுத்து வந்து குடிக்கும் குரங்கு. இடம்: உடுமலை திருமூர்த்திமலை.
பிரதான ஓணம் நாளை நடைபெறும் நிலையில், பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. மலையாளிகள் அமைப்பு சார்பில், சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் பழைய மதகுகள் மற்றும் சுவர்களில் புதர் மண்டிக் கிடந்த செடிகள் அகற்றப்பட்டு, இடிந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன