பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் சிவா ஆனந்தா சாலையில் உள்ள டிடி தமிழ் அலுவலகத்தில் ஆசிர்வாத தீபம் எற்றும் நிகழ்ச்சி நடந்தது. ரைப்பட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, பாலிமர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன், தினமலர் கோவை பதிப்பு வெளியிட்டார் எல்.ஆதிமூலம், ஜவுளி தொழில் வர்த்தகர் நல்லி குப்புசாமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மருத்துவர் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
விநாயகர் சிலைகளை சென்னையில் பல்வேறு பகுதியில் கரைக்க உள்ள நிலையில் கரைப்பதற்காக மெரினா பட்டினப்பாக்கம் சாலையில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அருவிகளில் முற்றிலுமாக நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.