திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலையடிவாரத்தில் உள்ள வீடுகளை அகற்றுவதாக கணக்கெடுக்கப்பட்ட ஆயிரத்தி 530 வீடுகளில் திருவண்ணாமலை தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாட்டம் கட்டாரிமங்கலம் பகுதியில் நிலவும் கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள விவசாய பணிக்கு நடுவே வயற்காட்டினுள் பனை ஓலையால் குடை அமைத்து அதன் கீழ் விவசாயிகள் இளைப்பாறி வருகின்றனர்.
நம் தினசரி வாழ்க்கைக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களை தெய்வமாக வணங்கும் ஆயுத பூஜையை போலவே, வட மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜை நடத்தப்படுகிறது. மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டம் சாந்திப்பூர் ரயில் நிலையத்தில் நடந்த விஸ்வகர்மா பூஜையில் மின்சார ரயிலுக்கு பூஜை செய்த ஊழியர்கள்.
சென்னையில் துறைமுகம்- மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பால திட்டத்தில் தூண்கள் அமைத்து பாதை அமைக்கும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் ஜரூராக நடக்கிறது. இடம்: எத்திராஜ் சாலை, எழும்பூர்.
நம் தினசரி வாழ்க்கைக்கு உதவும் கருவகள், இயந்திரங்கள், வாகனங்களை தெய்வமாக வணங்கும் ஆயுதபூஜையை போலவே, வட மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜை நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் சாந்திபூர் ரயில் நிலையத்தில் நடந்த விஸ்வகர்மா பூஜையில் மின்சார ரயிலுக்கு பூஜை செய்த ஊழியர்.
இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, தமிழக பக்தர்கள் சார்பில் ஒன்பது வெண்பட்டு திருக்குடைகளை திருமலையில் இன்று( செப்.,18)ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். அவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரி ஆகியோர் பெற்றுக் கொண்டார். உடன், தேவஸ்தான தலைமை விஜிலென்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா, திருப்பதி எஸ்.பி., சுப்பராயுலு, தேவஸ்தான உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் தலைவர் ஸ்ரீதர் வர்மா.
திருநெல்வேலி மாவட்டம், கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் அருகே, பாப்பாங்குளத்தில் உள்ள கல் குவாரியை மூட வலியுறுத்தி, கிராமத்தினர் கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தர பணியிடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனமாக முத்தண்ணன் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இடம்: கோவை, சுத்துவார் பேட்டை.