கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விழி கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது. உடன் எஸ்.பி., ஷஹ்னாஸ்.
நம் நாளிதழில் விவசாயிகளின் நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகள் குறித்து செய்தி வெளியானது; நெல் முளைத்து விட்டால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுவர் என சொல்லப்பட்டிருந்தது. தற்போது மழையில் நெல் நனைந்து முளைவிட்டதை, காட்டும் விவசாயி. இடம்: காவாந்தண்டலம் அரசு நெல் கொள்முதல் நிலையம், காஞ்சிபுரம்.
மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவின் அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் வரிக்குதிரை உடலில் காணப்படும் கோடுகளை போன்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் உலா வந்த வரிக்குதிரைகள். இது பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களையும், குழந்தைகளையும் பெரிதும் ஈர்த்துள்ளது.
தசரா பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரின் பாரம்பரியச் சின்னமான மைசூரு அரண்மனை புதுப்பொலிவு பெற்று வருகிறது. சாரல் மழையின் போது அரண்மனை பின்னணியில் தோன்றிய அழகான வானவில்.
ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில், பெருமாள் தனக்கு பிரியமான கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்திய அணியின் அணிவகுப்பை பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று சாதித்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகரும், கபடி வீரர் பவன் ஷெராவத்தும் முன்னின்று நடத்தி சென்றனர்.