திருநெல்வேலி மாவட்டம், கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் அருகே, பாப்பாங்குளத்தில் உள்ள கல் குவாரியை மூட வலியுறுத்தி, கிராமத்தினர் கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தர பணியிடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனமாக முத்தண்ணன் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இடம்: கோவை, சுத்துவார் பேட்டை.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகளின் சார்பில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலை விசர்ஜனமாக கொண்டு வந்து கோவை முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டது.