தூத்துக்குடி கட்டாரிமங்கலம் பகுதியில் வயல்களில் நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பெண்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பனை ஓலைகளை குடையாக பயன்படுத்தி வருகின்றனர்...
நம் தினசரி வாழ்க்கைக்கு உதவும் கருவகள், இயந்திரங்கள், வாகனங்களை தெய்வமாக வணங்கும் ஆயுதபூஜையை போலவே, வட மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜை நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் சாந்திபூர் ரயில் நிலையத்தில் நடந்த விஸ்வகர்மா பூஜையில் மின்சார ரயிலுக்கு பூஜை செய்த ஊழியர்.
இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, தமிழக பக்தர்கள் சார்பில் ஒன்பது வெண்பட்டு திருக்குடைகளை திருமலையில் இன்று( செப்.,18)ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். அவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரி ஆகியோர் பெற்றுக் கொண்டார். உடன், தேவஸ்தான தலைமை விஜிலென்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா, திருப்பதி எஸ்.பி., சுப்பராயுலு, தேவஸ்தான உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் தலைவர் ஸ்ரீதர் வர்மா.
திருநெல்வேலி மாவட்டம், கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் அருகே, பாப்பாங்குளத்தில் உள்ள கல் குவாரியை மூட வலியுறுத்தி, கிராமத்தினர் கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தர பணியிடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனமாக முத்தண்ணன் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இடம்: கோவை, சுத்துவார் பேட்டை.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.