தசரா பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரின் பாரம்பரியச் சின்னமான மைசூரு அரண்மனை புதுப்பொலிவு பெற்று வருகிறது. சாரல் மழையின் போது அரண்மனை பின்னணியில் தோன்றிய அழகான வானவில்.
ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில், பெருமாள் தனக்கு பிரியமான கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்திய அணியின் அணிவகுப்பை பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று சாதித்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகரும், கபடி வீரர் பவன் ஷெராவத்தும் முன்னின்று நடத்தி சென்றனர்.
தூத்துக்குடி மாட்டம் கட்டாரிமங்கலம் பகுதியில் நிலவும் கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள விவசாய பணிக்கு நடுவே வயற்காட்டினுள் பனை ஓலையால் குடை அமைத்து அதன் கீழ் விவசாயிகள் இளைப்பாறி வருகின்றனர்.