ADDED : மார் 29, 2025 04:45 AM
�� பாகற்காயை பிரை செய்வதற்கு முன்பு அரை மணி நேரம் உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைத்தால் கசப்புத் தன்மை குறையும்.
அடை மாவில் துருவிய கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து அடை வார்த்தால் சுவையாக இருக்கும்
பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊற வைத்தால் வழக்கத்தை விட சுவை அதிகமாக இருக்கும்.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது அதனுடன் அரை கரண்டி வெந்தயம் சேர்த்தால் மணக்கும்
வெங்காய பக்கோடா செய்யும் போது அதில் வறுத்த நிலக்கடலை பவுடரை சேர்த்தால், மொறு மொறுப்பு அதிகம் இருக்கும்.
மட்டன் மிருதுவாக இருக்க தயிர், உப்பு, சர்க்கரை சேர்த்து ஊற வைத்த பின் சமைத்தால் சுவையாக இருக்கும்.
கீரை மசியல் செய்யும் போது சிறிது சோறு வடித்த கஞ்சியை சேர்த்து மசித்தால், நன்கு குறைவாக மசியும்
வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசையின் நடுப்பகுதியில் சிறு துளையிட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்து விடும்