♨ கேரட்டை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் கண்களில் புரை வராமல் பாதுகாக்கும்.
♨ உருளைக் கிழங்கையும், வெங்காயத்தையும் அருகில் போட்டு வைக்கக் கூடாது. இப்படி செய்தால் உருளைக்கிழங்கு சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.
♨ சாதத்தை வடிக்கும் போது ஓரிரு துளி நல்லெண்ணெய் ஊற்றினால், சாதம் உதிரி உதிரியாக வரும்.
♨ தற்போது கோடைக்காலம் துவங்கி விட்டதால் தினமும் மோர் குடியுங்கள். மோர் குடிப்பதால் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். உடலின் சூடு சமநிலைப்படும்.
♨ வெண்டைக்காயை நறுக்கும் முன்பு கத்தியில் சிறிது எலுமிச்சை சாற்றை தடவி நறுக்கினால், பிசுபிசுப்பாக ஒட்டாது.
♨ கார சுண்டலுக்கு இஞ்சி, பெருங்காயம் சேர்த்தும்; இனிப்பு சுண்டலுக்கு சுக்கு சேர்த்தும் செய்தால் வாயு பிரச்னை ஏற்படாது.
♨ சமைக்கும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை இலையை சேர்க்கக்கூடாது. சமைத்து முடித்த பின் கடைசியாக சேர்க்கும் போது தான் அதன் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
♨ ரோஜா இதழ்களில் செய்யப்படும் குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சம்பந்தமான பிரச்னைகள் குறையும்.
♨ குங்குமப்பூ, கேசரி பொடி சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி அதில் ரசகுல்லாவை ஊறவைத்தால் மணம் அற்புதமாக இருக்கும்.

