sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ சோள மாவில் சுவையான பாம்பே அல்வா

 சோள மாவில் சுவையான பாம்பே அல்வா

 சோள மாவில் சுவையான பாம்பே அல்வா


ADDED : ஜன 03, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 06:17 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

அல்வா என்றாலே, வாயில் எச்சில் ஊறும். பாதாம் அல்வா, கோதுமை அல்வா என பலவிதமான அல்வா செய்கின்றனர். சோள மாவிலும் கூட சுவையான பாம்பே அல்வா செய்யலாம். அதை எப்படி செய்வது என, பார்க்கலாமா.

தேவையன பொருட்கள்

l சோள மாவு- அரை கிலோ

l எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

l சர்க்கரை-1 கிலோநெய்- அரை கிலோ

l சிவப்பு புட் கலர் - அரை ஸ்பூன்

l முந்திரிப்பருப்பு - அரை கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரை கிலோ சோள மாவு, 350 மி.லி., நீரை சேர்த்து கட்டிகள் இல்லாமல், நன்றாக பிசைந்து கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து, அடி கனமான பாத்திரத்தை வைத்து, 700 மி.லி., தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் சர்க்கரை நீரில், பாதி அளவை தனியாக எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தில் மிச்சமுள்ள சர்க்கரை நீரில், இரண்டு ஸபூன் நெய் ஊற்றி சோள மாவை போட்டு, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, 18 நிமிடம் வரை கலக்கவும். அதன்பின் தனியாக எடுத்து வைத்த சர்க்கரை நீரை சோளமாவு கலவையில் சேர்த்து கலக்கவும். அதன்பின் எலுமிச்சை சாறை சிறிது, சிறிதாக ஊற்றவும். மிச்சமுள்ள நெய்யை ஊற்றி, விடாமல் கிளறவும்.

அதன்பின் சிவப்பு புட் கலர் மற்றும் கால் கப் முந்திரிப்பருப்பை போட்டு, சில நிமிடங்கள் கிளறவும். அல்வா வாணலியில் ஒட்டாமல், திரண்டு வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். அதன் மீது மிச்சமுள்ள முந்திரிப்பருப்பை துாவி அலங்கரிக்கவும். இதை ஐந்து மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். அதன்பின் துண்டுகள் போட்டு, வீட்டினருக்கு பரிமாறவும். பாம்பே அல்வாவை அனைவரும் விரும்புவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us