sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

15 நிமிடத்தில் 'மதுரை பன் அல்வா'

/

15 நிமிடத்தில் 'மதுரை பன் அல்வா'

15 நிமிடத்தில் 'மதுரை பன் அல்வா'

15 நிமிடத்தில் 'மதுரை பன் அல்வா'


UPDATED : ஏப் 22, 2025 08:49 AM

ADDED : ஏப் 19, 2025 05:36 AM

Google News

UPDATED : ஏப் 22, 2025 08:49 AM ADDED : ஏப் 19, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல விதமான உணவுகளுக்கு பெயர் பெற்றதில் முதலிடம் மதுரைக்கு உண்டு. மல்லிப்பூ இட்லி, ஜிகர்தண்டா என பல உணவு வகைகள் பேமஸ். இந்த வாரம் இவ்வூரின் 'பன் அல்வா' எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

செய்முறை


முதலில் பன்னை உதிரியாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் உதிர்ந்து வைத்துள்ள பன்னை அதில் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 'ரஸ்க்' போன்று மொறு மொறு என்ற பதத்தில் வந்ததும், வேறு பாத்திரத்தில் போடவும்.

பின், அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி வறுத்து வைத்துள்ள பன்னை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது தண்ணீர், அரை கப் பால் சேர்த்து நன்றாக கிளறவும்.

கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வந்ததும், கருப்புக்கட்டியை காய்ச்சி வடிகட்டி, பன் கலவையில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்க்கவும்.

15 நிமிடங்களுக்கு நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நெய்யை முழுவதுமாக சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.

நெய் பிரிந்து, பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால் போதும். சுவையான மதுரை ஸ்பெஷல் பன் அல்வா ரெடி

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us