
செய்முறை: மட்டன் துண்டுகளை நன்கு கழுவி, அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் துாள், மிளகாய்த் துாள், மிளகு, தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.
வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை வட்டத் துண்டுகளாக நறுக்கவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கவும். அது மிதமான சூட்டில் சூடானதும், பிரியாணி இலைகளைப் பாத்திரத்தின் அடியில் வைக்கவும்.
மசாலா தடவிய மட்டனின் பாதி அளவை முதல் அடுக்கில் சமமாகப் பரப்பவும். இரண்டாவது அடுக்கில் வெங்காய வட்டங்களின் ஒரு அடுக்கையும், அதைத் தொடர்ந்து உருளைக்கிழங்கின் மற்றொரு அடுக்கையும், அடுத்து தக்காளியையும் வைக்கவும். மீதமுள்ள மட்டனுக்கும் இதே செயல்முறையை மீண்டும் செய்யவும். மட்டன், தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் இரண்டாவது அடுக்கை முடித்தவுடன், கடைசி அடுக்கின் மேல் 2 தேக்கரண்டி நெய் மற்றும் காஷ்மீரி சிவப்பு மிளகாய்த் துாளைச் சேர்க்கவும்.
பாத்திரங்களை மூடி, குறைந்த தீயில் ஒன்றரை மணி நேரம் தம் போட்டு வேக விடவும். கிளற வேண்டாம், மாறாக, பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்க, சீரான இடைவெளியில் அதை இடவலமாக அசைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, மேலும் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு இந்திய ரொட்டியுடன் துருக்கி கபாபைப் பரிமாறவும்.

