உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 05, 2026 03:26 AM

அ நிறம் | அளவு
- நமது நிருபர் -:
பொதுவாக ரவையில், கேசரிபாத் செய்வது வழக்கம். கடலைப்பருப்பிலும் கூட, சுவையான கேசரி தயாரிக்கலாம். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாமா...
செய்முறை கடலைப்பருப்பை நன்றாக வேக வைத்து, மிக்சியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு விழுதை போடவும். இதில் வெல்ல துறுவல் சேர்த்து, நன்கு கிளறவும். கலவை சுருண்டு வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய் துாள், நெய் ஊற்றி கிளறவும். சூடாக பரிமாறினால் சுவையாக இருக்கும்.
பண்டிகை நாட்களில், இதை எளிதாக செய்யலாம். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அனைவருக்கும் கடலைப்பருப்பு கேசரி பிடிக்கும். வீட்டுக்கு திடீர் விருந்தினர்கள் வந்தால், செய்து கொடுத்து அசத்தலாம்!
